கரோனா பெருந்தொற்று பரவாமல் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனைப் பொதுமக்களும் பின்பற்ற வேண்டும் என்பதில் அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் விடா முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன்படி, தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு சந்தைப் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷினி, வெளியே வரும் ஒவ்வொரு நபர்களை அழைத்து அநாவசியமாக வெளியே வரவேண்டாம் எனவும், நோய்த்தொற்று பரவினால் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.