தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமெடுத்த நிலையில், மாநில அரசு ஊரடங்கு உத்தரவை மீண்டும் கடுமையாக்கி உள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவித்தது.
முழு ஊரடங்கு: விதிகளை மீறுபவர்களை எச்சரிக்கும் காவல் துறை - தென்காசியில் முழு ஊரடங்கு
தென்காசி: முழு ஊரடங்கு விதிகளை மீறி அநாவசியமாக வெளியில் சுற்றித் திரிபவர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
![முழு ஊரடங்கு: விதிகளை மீறுபவர்களை எச்சரிக்கும் காவல் துறை கரோனா ஊரடங்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:24:27:1619340867-tn-tki-02-sunday-lockdown-vis-tn10038sdmp4-25042021103325-2504f-1619327005-310.jpg)
தொடர்ந்து முழு ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும், ஊரடங்கில் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 9 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள், கரோனா முன்கள பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் தவிர தேவையின்றி வெளியே சுற்றியவர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பினர்.