தென்காசி: குற்றாலம் பேரூராட்சியில் உள்ள 8 வார்டுகளில் திமுக 4 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 4ஆம் தேதி நடந்த தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலை திமுகவினர் புறக்கணித்ததால் அப்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (மார்ச் 28) குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பேரூராட்சி கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலரும் (கலால்) துணை ஆணையருமான ராஜமனோகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் துணை ஆட்சியர் ஷீலா ஆகியோர் தேர்தலை நடத்த 9.30 மணி முதல் காத்திருந்தனர்.