தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 5, 2020, 5:57 PM IST

ETV Bharat / state

ஏர் கலப்பை பேரணி நடத்த முயன்ற காங்கிரசார் கைது!

தென்காசி: சுரண்டை அருகே வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் கலப்பையுடன் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஏர் கலப்பை பேரணி நடத்த முயன்ற காங்கிரசார் கைது
ஏர் கலப்பை பேரணி நடத்த முயன்ற காங்கிரசார் கைது

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் வடமாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சுரண்டையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மாவட்ட தலைவர் பழனி தலைமையில் 150-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏர் கலப்பை பேரணி நடத்த முயன்ற காங்கிரசார் கைது

அப்போது அவர்கள் மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து காங்கிரசார் ஏர் கலப்பையுடன் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரணி நடத்த முயன்றனர். உடனே அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: விவசாயிகளின் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு இடதுசாரிகள் ஆதரவு

ABOUT THE AUTHOR

...view details