தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 20, 2021, 8:34 AM IST

ETV Bharat / state

‘சங்கரன்கோவில் தொகுதி என்றால் அது அதிமுக கோட்டை’

தென்காசி: சங்கரன்கோவிலில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி சங்கரன்கோவில் தொகுதி என்றால் அது அதிமுக கோட்டை எனக் கூறினார்.

சங்கரன்கோவிலில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி
சங்கரன்கோவிலில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சங்கரன்கோவில் தொகுதி என்றால் அது அதிமுக கோட்டை என்பதைத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கிறோம்.

விஞ்ஞான உலகில் நமது எதிரிகள் பல்வேறு பொய்ச் செய்திகளைக் கூறிவருகின்றனர். அதனை நமது தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் முறியடித்து நமது அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி நமது வெற்றிக்குப் பாடுபட வேண்டும்” என்றார்.

சங்கரன்கோவிலில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி

இதைத் தொடர்ந்து விழா நிகழ்ச்சியில் குழந்தை ஒன்றுக்கு சிவராஜேஷ் என முதலமைச்சர் பெயர் சூட்டினார். இந்த விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பயண களைப்பு: வண்டியை நிறுத்தி ரோட்டோரக் கடைக்குச் சென்று டீ குடித்த எடப்பாடி!

ABOUT THE AUTHOR

...view details