தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியலினத்தைச் சேர்ந்த இருவேறு பிரிவினருக்கிடையே மோதல்: வைரலாகும் வீடியோ - caste related issue

தென்காசி: உயிரிழந்தவரின் உடலை எடுத்துச் செல்லத் தடைவிதித்ததால் இருவேறு சமூகத்தினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

வைரலாகும் வீடியோ
v

By

Published : Oct 15, 2020, 1:02 AM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையாங்குளம் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மணி என்பவர் கடந்த 11ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை பட்டியலினத்தைச் சேர்ந்த வேறுபிரிவினரான செல்லையா (65) என்ற முதியவர் தனது வீட்டு வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தியதால் இருவேறு சமூகத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த குருவிகுளம் காவல் துறையினர் இருபிரிவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அதன் பின்னர் உயிரிழந்தவரின் உடலை அந்த வழியாக அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இது போன்று இனி நடக்க கூடாது என காவல் துறையினர் எச்சரித்ததாகவும், இருபிரிவினரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இதுகுறித்து வழக்குப் பதிவு எதுவும் இதுவரை செய்யவில்லை என தெரிகிறது.

வைரலாகும் வீடியோ

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

தற்போது, உயிரிழந்தவரை இறுதிச் சடங்குக்காக தெருவில் எடுத்துச் செல்லும்போது தடுத்து நிறுத்திய முதியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ஊராட்சித் தலைவரை சாதி ரீதியாக அவமானப்படுத்திய விவகாரம்: காவல் துறை வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details