மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 13) நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக தகுந்த இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்னேற்பாடுகள், தேர்வு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது.
நான்காவது ஆண்டாக தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறும் நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இரண்டு தேர்வு மையங்களிலும், செங்கோட்டையில் ஒரு தேர்வு மையம் என மூன்று தேர்வு மையங்களில் 668 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.