தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரள மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கல்!

தென்காசி: மூணாறில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த தென்காசியைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

By

Published : Feb 8, 2021, 6:38 PM IST

tenkasi collector
tenkasi collector

வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சமீரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களும் மக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டனர்.

விதவை பென்ஷன் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம், முதியோர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாயிலாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனமழையால் மண் சரிவு ஏற்பட்டது. இதில் தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த காந்திராஜன் என்பவர் உயிரிழந்தார். தொடர்ந்து, முதலமைச்சர் பொது நிவாரண திட்டத்தின் கீழ் ரூபாய் மூன்று லட்சத்துக்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

இதையும் படிங்க:நவமலையில் வசிக்க வீடு இல்லை... குடிக்க மட்டும் தண்ணீர் இணைப்பு

ABOUT THE AUTHOR

...view details