தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 26, 2022, 8:26 PM IST

ETV Bharat / state

சிவகங்கை: கருப்பர்கோயில்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா!

சிவகங்கை அருகே கருப்பர்கோயில்பட்டி கண்மாயில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இந்த மீன்பிடித் திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்திருந்து கண்டு ரசித்தனர்.

கருப்பர்கோயில்பட்டி கண்மாயில் மீன்பிடி திருவிழா
கருப்பர்கோயில்பட்டி கண்மாயில் மீன்பிடி திருவிழா

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை அருகே கருப்பர்கோயில்பட்டி கண்மாயில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் மூங்கிலைக் கொண்டு உருவாக்கப்பட்ட கூடையைப் பயன்படுத்தி மீன்களை பிடித்தனர்.

இதில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்டவர்கள் கிராம வளர்ச்சிக்காக தலா ரூ.200 செலுத்தி மீன் பிடித்திருவிழாவில் கலந்து கொண்டனர்.

கருப்பர்கோயில்பட்டி கண்மாயில் மீன்பிடி திருவிழா

வவ்வால், ஜிலேபி, கெண்டை, கட்லா, கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் இந்த கண்மாயில் சிக்கின. இந்த மீன்பிடித் திருவிழாவை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்திருந்து கண்டுரசித்தனர்.

இதையும் படிங்க:'உற்சாக பானம் இல்லையென்றாலும், ஊட்டச்சத்து பானம்' - வேல்முருகன் கேள்விக்கு தங்கம் தென்னரசு கலகல!

ABOUT THE AUTHOR

...view details