தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரு நிறுவனங்களின் முகவராக இருக்கிறார் மோடி -வைகோ குற்றச்சாட்டு - DMK Stalin

சிவகங்கை: மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  காரத்தி சிதம்பரத்தை ஆதரித்து மதிமுக வைகோ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, பெரு நிறுவனங்களின் முகவராக மோடி இருப்பதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

vaiko

By

Published : Apr 7, 2019, 10:07 AM IST

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தத் தேர்தல் ஜனநாயகமா? பாசிசமா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கிற தேர்தல். பாஜகவினர் ஆட்சியை தக்கவைக்க எதையும் செய்ய துணிவார்கள். பெரியார் இழிவுபடுத்தப்படுகிறார் என்றால் தமிழ் மண் இழிவுபடுத்தப்படுகிறது என்று அர்த்தம்.

மோடி ஒவ்வொரு நாளும் ஆபத்தான, தவறான தகவல்களை சொல்லிவருகிறார். இந்து மதத்தை யாரும் குறைத்து பேசவில்லை. ஆனால் ஏதாவது வன்முறை சம்பவங்களில் இந்துத்துவா அமைப்புகள் ஈடுபட்டது உண்டா? என்று மோடி கேட்கிறார். காந்தியடிகளை கோட்சே சுட்டு கொல்லவில்லையா? இது மோடிக்கு தெரியாதா? இந்துக்களை போல் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர் அவரவர் ஆலயங்களில் வழிபாடு நடத்துகின்றனர்.

அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதே மதச்சார்ப்பற்ற தன்மை. அதற்கு வேட்டுவைக்க முடிவு செய்ததன் விளைவுதான் கலவரம் நடைபெற காரணம். பெரியாரை இழிவுபடுத்தியவரை (ஹெச்.ராஜா) வைப்புத்தொகை இழக்கச் செய்யுங்கள். தமிழ்நாட்டில் 6.2 விழுக்காடு பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர்.

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்றார் மோடி. இரண்டாயிரம் பேருக்கு கூட வேலை கிடைக்கவில்லை. வங்கி கணக்கிற்கு ரூ.15 லட்சம் வரும் என்றார், ரூ.15 கூட வரவில்லை. மோடி பெரு நிறுவனங்களின் முகவராக உள்ளார்.

2014இல் மேகதாது அணை கட்டிக் கொள்ளுங்கள் என்று ரகசியமாக சொன்னது பாஜக. காவிரி நீர் வராவிட்டால் டெல்டா மாவட்டங்கள் எத்தியோப்பியா நாடாகிவிடும்.

தமிழ்நாடு அரசின் தரகு கெடுபிடியால் பல தொழிற்சாலைகள் வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டன. பல ஆயிரம் கோடி மோசடி செய்த மல்லையா, நிரவ் மோடி பாஜக உதவியால் வெளிநாடு தப்பிவிட்டனர். பெரு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி கடன் தள்ளுபடி கிடைத்துள்ளது. ஆனால் விவசாயக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி செய்ய மோடி மறுத்துவிட்டார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கச் செய்தவர் ப.சிதம்பரம். இந்தத் தேர்தல் மூலம் திமுக ஆட்சி மலரும். அதேபோல் திராவிடர் இயக்கங்களின் கோரிக்கைகளை தாங்களாகவே தருகிறோம் என்பது போல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வைகோ

ABOUT THE AUTHOR

...view details