சிவகங்கை: சிவகங்கையில் வசித்து வந்தவர் முத்துப்பாண்டி. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சிவகங்கை கடை தெருவில் தனது நண்பரான சரவணன் என்பவருடன் முத்துப்பாண்டி பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 8 பேர் கொண்ட கும்பல் முத்துப்பாண்டியை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்.
இதனை தடுக்க முயன்ற அவரது நண்பர் சரவணனனுக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அரிவாளால் வெட்டப்பட்ட முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் சரவணனுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.