தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழடியில் பழங்கால மண்பானை கண்டுபிடிப்பு! - பழங்கால மண் பானை கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பெரிய வடிவிலான பழங்கால மண்பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மண் பானை கண்டுபிடிப்பு
மண் பானை கண்டுபிடிப்பு

By

Published : Mar 11, 2022, 4:49 PM IST

சிவகங்கை: கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய நான்கு இடங்களிலும் ஒன்றிய அரசு சார்பாக மூன்று கட்ட அகழாய்வும் அதனைத்தொடர்ந்து மாநில அரசு சார்பாக 4 முதல் 7 கட்ட அகழாய்வுப் பணிகளும் நடந்துமுடிந்துள்ளன. இதில் கி.மு 2,600 ஆண்டுகள் பழமையான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அகழாய்வுப் பணிகள்

இதனைத்தொடர்ந்து எட்டாம் கட்ட அகழாய்வுப்பணிகள், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கின. இந்நிலையில் கீழடியில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மண் பானை கண்டுபிடிப்பு

மண் பானை கண்டுபிடிப்பு

இதில் ஒரு குழியில் சுமார் 4 அடி ஆழத்தில் தோண்டும்போது சிதைந்த நிலையில் பெரிய வடிவிலான பழங்கால மண்பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றொரு குழியில் தோண்டும்போது 4 அடி ஆழத்தில் நம் முன்னோர்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய செங்கற்கள் ஒரே இடத்தில் அருகே அருகே வரிசையாக கிடைத்துள்ளன.

இதையும் படிங்க:பண்ணாரி அம்மன் அருளால் திரைப்படங்களில் மீண்டும் கலக்குவேன்: நடிகர் வடிவேல்

ABOUT THE AUTHOR

...view details