தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடமாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது! - Norths Four of them arrested for robbery

சிவகங்கை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வடமாநில கொள்ளையர்கள் நான்கு பேரை CCTV காட்சியை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

CCTV

By

Published : Jul 27, 2019, 8:14 AM IST


தேவக்கோட்டையில் உள்ள வானவில் ஷாப்பிங்க் சென்டர், மெட் ப்ளஸ் மருந்தகம், டீக்கடை, செக்காலையில் உள்ள அரிசிக்கடை ஆகியவற்றில் ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு பணம் மட்டும் திருடப்பட்டிருந்தது.தேவக்கோட்டை , காரைக்குடி ஆகிய இரு ஊர்களில் அடுத்தடுத்த நாட்களில் இச்சம்பவம் நடைப்பெற்றிருந்தாலும், சம்பவம் ஒரே மாதிரியாக நடந்ததால் எஸ்.ஐ. மீனாட்சி சுந்தரம் தலைமையிலான தேவக்கோட்டைக் குற்றப்பிரிவுப் காவல்துறையினர் CCTV காட்சியை வைத்து தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர் .

வெளி மாநிலத்தினர்

CCTV காட்சியில் இருந்தவர்கள் வெளி மாநிலத்தினர் என்பதால், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் யார் தங்கி உள்ளனர் என தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளில் போலீசார் சோதனை செய்தனர்.

வடமாநில கொள்ளையர்கள் 4 பேர்
இதில் காரைக்குடி தனியார் தங்கும் விடுதியில் ராஜஸ்தானை சேர்ந்த அசோக்குமார்,கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் மாலிக், கணேஷ் மாலிக், சோஹைல் குலாம்பர்கத் ஆகிய நான்கு பேரும் பத்து நாட்களாக தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை தேவகோட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details