தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொள்ளையடித்த சிலைகளை கோயில் வாசலில் போட்டுச் சென்ற கொள்ளையர்கள்! - மானாமதுரை

சிவகங்கை: மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் கடந்த மாதம் காணாமல் போன சிலைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கோயில் வாசலில் போட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியினரிடயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை

By

Published : Jul 26, 2019, 4:27 PM IST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான கரியமாணிக்க பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த மாதம் 19ஆம் தேதியன்று கோயிலின் கதவு உடைக்கப்பட்டு ரூ.4 லட்சம் மதிப்புள்ள சமேத கரியமாணிக்க பெருமாள் சிலை, ஸ்ரீ தேவி, பூ தேவி ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகள், அந்த சிலைகளின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.

இதையடுத்து கோயிலின் நிர்வாகி ஸ்ரீனிவாசன் அளித்த புகாரை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவந்தனர்.

கொள்ளையடித்து சென்ற சிலைகளை கோயில் வாசலில் போட்டுசென்ற கொள்ளையர்கள்

இந்நிலையில், கொள்ளையடித்து செல்லப்பட்ட ஐம்பொன் சிலைகளை இன்று காலை கோயில் வாசலில் கொள்ளையர்கள் போட்டுச் சென்றனர். ஆனால் சிலையின் கழுத்தில் கிடந்த தங்க நகைகள் மட்டும் இல்லாமல் இருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details