தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில அரசு நடத்தும் கல்லூரிகளுக்கு மத்திய அரசு தேர்வு நடத்தக் கூடாது - கார்த்தி சிதம்பரம் - மாநில அரசு நடத்தும் கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசு தேர்வு நடத்தக்கூடாது

மாநில அரசு நடத்தும் கல்லூரிகளுக்கு மத்திய அரசு தேர்வு நடத்தக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம் எம்.பி
கார்த்தி சிதம்பரம் எம்.பி

By

Published : Feb 12, 2022, 7:27 PM IST

சிவகங்கை:நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளரிடம் அவர் கூறுகையில், "நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றதைப் போல உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிபெறும். நீட் விவகாரத்தைப் பல கோணங்களில் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை மாநில அரசு நடத்தும் கல்லூரிகளுக்கு மத்திய அரசு தேர்வு நடத்தலாமா என்று கேட்டால் வேண்டாம் என்றுதான் சொல்வேன்.

ஆனால் மருத்துவக் கல்லூரிக்கு எப்படி இடம் ஒதுக்க வேண்டும். அது பிளஸ்-2 மதிப்பெண்ணை வைத்தா அல்லது நுழைவுத் தேர்வு வைத்தா? என்பதை முடிவுசெய்ய வேண்டியது கல்வியாளர்கள் என்றுதான் கூறுவேன். அதில் நுழைவுத் தேர்வு வைத்துத்தான் என்றால் அதைச் செய்ய வேண்டியது மாநில அரசுதான். மத்திய அரசின் இந்துத்துவா கொள்கையை எல்லா காலங்களிலும் தமிழ்நாடு மக்கள் நிராகரித்துதான் வந்துள்ளார்கள்.

ஐந்து மாநிலத் தேர்தலில் பஞ்சாப், உத்தரகாண்ட், கோவாவில் நல்ல முடிவு வரும் என்று நம்புகிறேன். குடியரசுத் தலைவரின் உரைக்குப் பதில் சொல்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு வருகிறார்.

ஆனால் அவர் அதற்குப் பதில் சொல்லாமல் பாஜக மேடைப் பேச்சாளரைப் போல் காங்கிரஸ் இதைச் செய்யவில்லை அதைச் செய்யவில்லை என்று பேசுகிறார். அவர் காங்கிரசைப் பற்றியேதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அவரது பயம்தான் இதில் வெளிவந்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க:தேர்தல் பரப்புரையை தொடங்கிய அமைச்சர் கே.என்.நேரு

ABOUT THE AUTHOR

...view details