தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 8, 2021, 4:01 PM IST

ETV Bharat / state

கண்டதேவி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் திருவிழா வழக்கு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

மதுரை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் குழு அமைத்து திருவிழா நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அம்மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

High court madurai bench
உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர், "சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெற்றது. அப்போது இருவேறு நபர்களின் முன் விரோதத்தை காரணமாக வைத்து இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் வகையில் கோயில் திருவிழாவில் மரியாதை வழங்கும் போது சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக நிகழ்வுகள் நடைபெற்றது. இருந்தபோதிலும் எவ்வித பிரச்னையுமின்றி கோயில் திருவிழா நிறைவடைந்தது.

இதுபோன்று கண்டதேவி கிராமத்தில் தொடர்ந்து இரு நபர்களுக்கு இடையே உள்ள தனிப்பட்ட பிரச்னை, இருதரப்பினர் மத்தியில் மோதல் ஏற்படும் வகையில் தொடர்ந்து தூண்டப்படுகிறது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் பிரச்னையை தீர்த்துக்கும் விதமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

எனவே கண்டதேவி கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா இனி வரும் காலங்களில் எந்த அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெற, அரசு அலுவர்கள் முன்னிலையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஆடு, மாடு, கோழிகளை துன்புறுத்தாமல் கொண்டு செல்ல அறிவுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details