தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கையில் இந்து மனுதர்ம நகல் எரிப்பு! - கைது

சிவகங்கை: சிவகங்கையில் இந்து மனுதர்ம நகலை எரிக்க முயன்ற திராவிடர் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.

திகவினர் போராட்டம்

By

Published : Feb 7, 2019, 8:42 PM IST


இந்து மனுதர்மம் பெண்ணடிமைத்தனம், சாதிய அடக்குமுறை, சூத்திர இழிவு உள்ளிட்டவற்றை பாதுகாப்பதாக கூறி திராவிட கழகத்தினர் தமிழகம் முழுவதும் இந்து மனுதர்ம நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தினர் 20 க்கும் மேற்பட்டோர், சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு இந்து மனு தர்ம நகலை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்காக நின்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

இருப்பினும் வெவ்வேறு இடங்களில் இருந்த திராவிட கழகத்தினர் திடீரென ஒன்றுகூடி திராவிடர் கழக கொடியுடன் இந்து மனுதர்ம நகலை எரிக்க முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றதால் இருதரப்பினரும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திகவினர் போராட்டம்

பின்னர் அவர்களிடமிருந்த மனுதர்ம நகலை கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். திராவிட கழகத்தினர் திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details