நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 64 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் 13 ஆயிரத்து 933 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை, இதுவரை 8 ஆயிரத்து 441 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 130 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.