தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்

By

Published : Jan 3, 2020, 7:36 AM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் முன்னிலையில் அமமுகவில் இருந்து விலகி 20க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

ammk_members_join_admk
ammk_members_join_admk

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து மரக்கன்றுகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது ஆலங்காயத்தை அடுத்த குரிசிலாப்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அமமகவிலிருந்து விலகி, அக்கட்சியின் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பெரியசாமி தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் அமைச்சர் நிலோபர் கபில் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்

பிற கட்சியிலிருந்து வந்து அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அமைச்சர் நாள்காட்டி, இனிப்புகள் ஆகியவை வழங்கி தொண்டர்களோடு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

இதையும் படிங்க: 'அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம்' - ஓபிஎஸ் பெருமிதம்

ABOUT THE AUTHOR

...view details