தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடங்கியது ஆடி - கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம் - ஆடி தள்ளுபடி

சிவகங்கை: ஆடி மாதம் தொடங்கிய நிலையில், காரைக்குடியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் பட்டுச்சேலை வாங்க வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

aadi

By

Published : Jul 17, 2019, 1:40 PM IST

ஆடி மாதம் என்றாலே தள்ளுபடிதான் அனைவரின் நினைவிற்கும் வரும். இந்த மாதத்தில் ஜவுளிக்கடை, நகைக்கடை உள்ளிட்ட நிறுவனங்களில் தள்ளுபடி விற்பனை நடைபெறுவது வழக்கம். அப்போது தள்ளுபடி மூலம் குறைந்த விலையில் ஆடைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவர். அந்தவகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில், ஆண்டுதோறும் ஆடி முதல் தேதியன்று வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில், பட்டுச்சேலை விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
அதன்படி, இன்று ஆடி முதல் தேதி என்பதால் வழக்கம் போல் இந்நிறுவனத்தின் சார்பில், திருமண மண்டபம் ஒன்றில் பட்டுச் சேலை விற்பனை செய்யப்படுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய விற்பனை 8 மணிக்குள் முக்கால் பகுதி விற்பனையை எட்டியது. 10,000 ரூபாய் பெருமானமுள்ள பட்டுச் சேலைகள் ரூ.5 ஆயிரத்துக்கும், 5000 ரூபாய் மதிப்புமுள்ள சேலைகள் ரூபாய் 2500க்கும் விற்பனை செய்யப்பட்டதால், வாடிக்கையாளர்கள் சேலைகளை வாங்க குவிந்தனர். பாதி விலை குறைவு என்பதால், ஒவ்வொருவரும் இரண்டுக்கு மேற்பட்ட சேலைகளை வாங்கிச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details