தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் கல் வைத்த இளைஞர்கள் கைது! - ரயிலை கவிழ்க சதி

சேலம்: சங்ககிரி அருகேவுள்ள ரயில் தண்டவாளத்தில், கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சித்த இரண்டு இளைஞர்களை ரயில்வே தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

Youths arrested for throwing stones at rail track
Youths arrested for throwing stones at rail track

By

Published : May 22, 2020, 10:40 PM IST

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேவுள்ள ஆலங்காடு பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் கடந்த 18ஆம் தேதி பெரிய கல் ஒன்றை அடையளம் தெரியாத நபர்கள் வைத்துள்ளனர். இதையடுத்து அந்த வழி தடத்தில் வந்த சரக்கு ரயில், அக்கல்லில் மோதி நின்றுள்ளது.

இதைத் தொடர்ந்து ரயில் ஓட்டுநர், தண்டவாளத்தில் கிடந்த கல்லை அகற்றிவிட்டு, இதுகுறித்து ரயில்வே காவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சங்ககிரி பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம், பாபு ஆகிய இருவரைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பூனையை தூக்குமேடைக்கு ஏற்றிய டிக் டாக் விரும்பி; சிறையில் உணவளித்த போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details