தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுலாப் பயணிகள் அலட்சியம்; வனவிலங்குகள் உயிருக்கு ஆபத்து! - tourist negligence

சேலம்: ஏற்காடு பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள் வனப்பகுதிக்குள் மது அருந்திவிட்டு ஆங்காங்கே பாட்டில்களை உடைத்தெறிந்து விட்டுச் செல்வதால், வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Wildlife

By

Published : Jul 27, 2019, 10:51 AM IST

சேலம் மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஏற்காடு மலைப்பகுதி திகழ்கிறது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி பல வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் சீசன் நேரங்களில் இந்தப் பகுதி எப்போதும் களை கட்டியிருக்கும்.

வனப்பகுதியில் உடைந்த நிலையில் கிடக்கும் பாட்டில்கள்

அப்படி இங்கு சுற்றுலா வரும் பயணிகள் அத்துமீறி வனப்பகுதிக்குள் செல்வது மட்டுமல்லாமல் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டுச் செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதிக்கு உணவு தேடிவரும் வனவிலங்குகள் அவற்றில் சிக்கி காயமடைவதுடன், உயிரிழக்கவும் நேரிடுகிறது. இதனால் இந்த வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கவும், வனவிலங்குகளின் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் எனவும் வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details