தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 24, 2021, 7:02 AM IST

ETV Bharat / state

கணவர் இறப்பில் சந்தேகம்: முதலமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட்ட மனைவி

சேலம்: திருச்சி ஊரக்கரையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி முதலமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட பெண்
முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட பெண்

திருச்சி மாவட்டம் ஊரக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ்-கோமதி தம்பதி. கடந்த டிசம்பர் மாதம் ஊரக்கரை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரமேஷ் உயிரிழந்தார். இதையடுத்து, கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது மனைவி ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட பெண்

ஆனால், ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த கோமதி, தனது பெண் குழந்தைகளுடன் சேலம் சென்றார். பின்னர், முதலமைச்சர் பழனிசாமியின் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அவரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து கோமதி தனது குழந்தைகளுடன் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "எனது கணவர் கார் மோதி இறந்ததாக காவலர்கள் தெரிவிக்கின்றனர். கணவர் மீது மோதிய கார் குறித்த எந்த விவரங்களையும் எங்களிடம் கூற மறுக்கின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனது பெண் குழந்தைகள் தடையின்றி கல்வி பெற முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இது கைம்பெண்களின் கிராமம்- இவர்களின் துயர் நீக்குமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details