தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 3, 2020, 1:44 PM IST

ETV Bharat / state

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

சேலம்: தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துவருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dam
Mettur Dam

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து கடந்த இரண்டு நாள்களாக அதிகரித்து உள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் வரத்து 6522 கனஅடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து 17,937 கனஅடியாக அதிகரித்து உள்ளது என்று மேட்டூர் பொதுப்பணித் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை எடுத்து அணையின் நீர்மட்டம் 89.500 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 52 ஆயிரத்து
83 டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசன வசதிக்காக 9 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் வழியாக பாசன வசதிக்காக 800 கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைப் பகுதியில் நேற்று இரவு 34.80 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒகேனக்கல்லிலிருந்து வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துவருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details