தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 5, 2020, 8:44 PM IST

ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை - சேலத்தில் பரபரப்பு!

சேலம் :கன்னங்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Vitin has broken the lock and looted goods
Vitin has broken the lock and looted goods

சேலம் கன்னங்குறிச்சி அருகேயுள்ள கோகுல் நகர் பகுதியில் பத்திரப்பதிவு அலுவலர் சந்தானம் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று குடும்பத்துடன் தனது உறவினரின் இறப்பு சடங்கிற்காக அருர் சென்று, இன்று பிற்பகல் வீடு திரும்பியபோது பின் பக்கக்கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 17 சவரன் தங்க நகை, லேப்டாப் மற்றும் 12 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அருகிலுள்ள கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்த பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து கொள்ளையர்கள் தங்கம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சிறார் ஆபாசப் படங்கள் பதிவிறக்கம்; போக்சோவில் இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details