தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 20, 2019, 7:39 AM IST

ETV Bharat / state

குரும்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்த நீர்ப்பறவைகள்

சேலம்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒன்பது நீர்ப்பறவைகளை பொதுமக்களின் பார்வைக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

நீர் பறவை


சேலம் மாவட்டம், சேலம் வனக்கோட்டத்தில் உள்ள ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் மயில், வெள்ளை மயில், புள்ளி மான், கடமான், குரங்கு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் சென்னை வண்டலூர் வன உயிரியல் பூங்காவிலிருந்து 9 நீர்ப் பறவைகள் சேலம் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கூழைக்கடா என்றழைக்கப்படும் பறவை மூன்று, சாம்பல் நிற நாரை எனப்படும் பறவை முன்று, பூநாரை எனப்படும் பறவை மூன்று என மொத்தம் 9 நீர்ப் பறவைகள் சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார். மேலும், பொதுமக்களின் பார்வைக்காக அப்பறவைகளின் இருப்பிடத்தில் விடப்பட்டுள்ளது.

நீர்பறவைகளை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர்

இதனைத் தொடர்ந்து, குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடைபெற்று வரும் பல்வேறு பூங்கா மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் மற்றும் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட வன அலுவலர் பெரியசாமி பேட்டி

சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மேம்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது. இதுமட்டுமல்லாமல், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து கெங்கை நீர் முதலை மற்றும் வெளிமான் ஆகிய விலங்கினங்கள் கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க:சிறுத்தை தோல் கடத்தல், ஆறு பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details