சேலம் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள சேலம் பாலி கிளினிக் என்ற தனியார் மருத்துவமனையில், தருமபுரி மாவட்டம் லலிகம் பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் மனைவி வெங்கட்டம்மாள் பிரசவத்திற்காக மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மகப்பேறு பிரிவில் அவருக்கு நேற்று காலை அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சையில், வெங்கட்டம்மாள் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேற்று மாலை பாலிகிளினிக் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.