சேலம் மாநகர எல்லைக்குள் உள்ள கந்தம்பட்டி பட்டியலினத்தவர் குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதிக்கு அருகில் வசித்து வரும் வெங்கடாசலம் என்பவர் பொதுவழிப் பாதையை வழிமறித்து தடுப்புச் சுவர் கட்டி வருகிறார்.
இதையறிந்த பட்டியலின குடியிருப்பு மக்கள், வெங்கடாசலம் சுவர் கட்டக் கூடாது என்று வலியுறுத்தினர். ஆனால் "நான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவுக்காரர் என்னிடம் யாரும் சுவர் கட்டக்கூடாது என்று கூறவேண்டாம், அப்படித்தான் சுவரை கட்டுவேன்” என்று வெங்கடாசலம் கூறியதாக தெரிகிறது.