தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 24, 2019, 10:19 AM IST

ETV Bharat / state

துணிக்கடை உரிமையாளரை கொல்ல முயற்சி: கொலையாளிகள் சரண்

சேலம் : நங்கவள்ளியில் ஜவுளிக்கடை ஒன்றில் உரிமையாளரை கொலை செய்ய நடந்த முயற்சியில் தேடப்பட்டு வந்த இருவர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

நங்கவள்ளி அருகே உள்ள பெரிய சோரகை பகுதியைச் சேர்ந்தவர் வேலுதங்கமணி (33). இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக உள்ள இவர் நங்கவள்ளியில் ஜவுளிக்கடை நடத்திவருகிறார்.

இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், ஜவுளிக் கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, வேலுதங்கமணியை சரமாரியாக வெட்டினர்.

இதில் தலை உள்பட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் வேலுதங்கமணியை வெட்டிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த வேலுதங்கமணி சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலை என்று மருத்துவர்கள் கூறியதால் வேலுதங்கமணி தற்போது பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நங்கவள்ளி காவல் துறையினர், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, விசாரணை செய்ததில் நங்கவள்ளியைச் சேர்ந்த சதீஷ், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பதும் தெரியவந்தது.

சதிஷ்,மணி ஆகிய இருவரும் சரண்

குற்றவாளிகளைப் பிடிக்க சேலம் சரக காவல் டிஐஜி பிரதீப் குமார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டுவந்த சதீஷ், மணி தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்தனர்.

இந்நிலையில் சதீஷின் கார் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்துவந்ததை அடுத்து சதீஷ், மணி ஆகியோர் சேலம் நீதிமன்றம் வந்து சரணடைந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சிவா இருவரையும் 30ஆம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானி கேர் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நங்கவள்ளி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details