தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர பகுதியில் தேர்வு செய்யப்பட்ட 86 பேருக்கு , சேலம் லைன் மேடு பகுதியில் உள்ள காவலர்கள் விளையாட்டு திடலில் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது .
டி.எஸ்.பி. ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில், உடற்பயிற்சி, காவலர்களுக்கான ஆரம்பக்கட்ட பயிற்சிகள், பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் முறை, வாகன தணிக்கையின்போது மேற்கொள்ளவேண்டிய பணிகள் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.