சேலம்: பி.ஜி ரோடு, சந்தைப்பேட்டை, செவ்வாபேட்டை பகுதிகளில் கலப்படம் செய்யப்பட்ட சோம்பு, சீரகம் உள்ளிட்ட மசாலா பொருட்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அந்தப் பகுதிகளிள் திடீர் சோதனையை நடத்தினர்.
அதில் ஏகே கார்ப்பரேஷன் உரிமையாளர் கிரித்குமார் ராமன் லால் என்பவருடைய சீரகம், சோம்பு, கடுகு சேமிப்பு குடோனிலும் சோதனை செய்யப்பட்டது. அப்போது கலப்படம் செய்து வைக்கப்பட்டிருந்த சீரகம் 8,250 கிலோ, சோம்பு 4,180 கிலோ மற்றும் கலப்படம் செய்வதற்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்கள், செயற்கை நிறமிகள், மாவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.