தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இஸ்லாமிய பெண்கள் அமைப்பு செயலாளர் கொலை: மூவர் கைது! - Three arrested for woman murder case

சேலம்: அம்மாபேட்டையில் இஸ்லாமியப் பெண்கள் அமைப்பு செயலாளர் கொலை செய்ப்பட்ட வழக்கில் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சேலத்தில் பெண் கொலை வழக்கில் மூவர் கைது  பெண் கொலை வழக்கில் மூவர் கைது  சேலத்தில் இஸ்லாமிய பெண்கள் அமைப்பு செயலாளர் கொலை  இஸ்லாமிய பெண்கள் அமைப்பு செயலாளர்  Three arrested for woman murder case in Salem  Three arrested for woman murder case  Secretary of the Islamic Women's Organization assassinated
Three arrested for woman murder case

By

Published : Mar 19, 2021, 1:13 PM IST

சேலம், அம்மாபேட்டை, பாலாஜி நகர், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பாஷா (52). இவரது மனைவி உமையா பானு (45). இவர் அரசு சார்ந்த இஸ்லாமியப் பெண்கள் உதவி மையத்தின் செயலாளராக இருந்து வந்தார். அப்போது, பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூல் செய்து இவர் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மார்ச் 12ஆம் தேதி வீட்டின் உள்ளே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உமையா பானுகொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக அம்மாபேட்டை காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அக்பர் பாஷா (43) உமையா பானுவிடம் 40 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்து போனதும், இதனால் அவர் தனது நண்பர்கள் அப்சர் (29), ரகுபதி (29) ஆகியோருடன் உமையா பானு வீட்டிற்குச் சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது ஏற்பட்ட தகராறில் மூவரும் உமையா பானுவை சராமரியாக தாக்கி, வாயில் துணியை அடைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து், அம்மாபேட்டை தனிப்படை காவல் துறையினர் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:முடிவெட்ட சொன்னதால் தவறான முடிவெடுத்த இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details