தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி: சேலம் பா.ம.க. பிரமுகர் மீது தாக்குதல்! - Attack on Salem County Council Leader

சேலம்: ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருங்கல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் மீது தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் அடயாளம் தெரியாத நபர்களை கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The attack on the leader of the panchayat
The attack on the leader of the panchayat

By

Published : Jan 7, 2020, 6:33 AM IST

சேலம் மாவட்டம் கருங்கல் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பாமகவைச் சேர்ந்த கணேசன் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து கணேசன் நேற்று ஊராட்சி மன்ற தலைவராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் அவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் கணேசன் உள்பட அவரின் ஆதரவாளர்கள் ஐந்து பேர் காயமுற்றனர். உள்ளாட்சி தேர்தலில் தோல்வியுற்ற ராஜேந்திரன், பழனிசாமி ஆகியோர் ஆள்வைத்து இத்தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பாமகவினர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாமக கணேசன்

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமகவினர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:

மீண்டும் அரங்கேறும் 'ரூட்டு தல' விவகாரம் - இரு மாணவர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details