தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் கே.பி. அன்பழகன் - பெரியார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா

சேலம்: உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

KP Anbalagan

By

Published : Oct 24, 2019, 11:10 PM IST

சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் 19ஆவது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு 55 ஆயிரத்து 784 மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்தார்.

இவ்விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், "பெரியார் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டிற்காக ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வி படிக்கும் 18 வயதிலிருந்து 23 வயதுவரை உள்ள மாணவ மாணவியர் எண்ணிக்கையில் இந்தியா 26.3 விழுக்காடு பெற்றுள்ளது. இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளில் 49 விழுக்காட்டினர் தமிழ்நாட்டில் உள்ளனர்" என்றார்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் 19ஆவது பட்டமளிப்பு விழா

பின்னர் பேசிய முன்னாள் கேரளா ஆளுநர் சதாசிவம், "மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இதனால், பொருளாதாரம், மனித ஆற்றலை முன்னெடுப்பது சாதகமாக உள்ளது.

அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பயிற்றுவிக்கப்பட்ட இளம் தலைமுறையினர் விண்வெளி ஆராய்ச்சி துறையில் பணியாற்றிவருவது நம் தேசத்திற்குப் பெருமை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details