தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவச மின்சாரம்: பலகட்ட போராட்டத்திற்குத் திட்டம்! - தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

சேலம்: இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தப்போவதாகத் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Tamilnadu farmers association plan to conduct many protest against eb bill 2020
Tamilnadu farmers association plan to conduct many protest against eb bill 2020

By

Published : Jun 4, 2020, 3:51 PM IST

சேலத்தில் நேற்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டுவரும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தற்போதைய மத்திய பாஜக அரசு நிறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

விவசாயிகளின் உயிர் ஆதாரமாக விளங்கும் இலவச மின்சாரத்தை தமிழ்நாட்டில் ரத்துசெய்துவிட்டால் முழுமையாக விவசாயம் அழிந்துபோகும் சூழல் ஏற்படும். எனவே, இதனைத் தடுக்க தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மத்திய அரசு, மின்சாரத் திட்டம் 2020 என்கிற திட்டத்தை உருவாக்கி உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரத்தை ரத்துசெய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த 2020 மின்சாரத் திட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டால் நிச்சயமாக இலவச மின்சாரம் ரத்துசெய்யப்படும் என்ற ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

இதனைத் தடுத்துநிறுத்த தமிழ்நாடு அரசு முயற்சிகளை இன்னும் வலிமைப்படுத்திட வேண்டும். இலவச மின்சாரத்தை தொடர தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தால் போதாது. மத்திய அரசுக்கு அழுத்தம்தர வேண்டும்.

மத்திய அரசின் தமிழ்நாடு விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை திட்டத்தை எதிர்த்து வரும் 11ஆம் தேதி மாநில அளவில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான விவசாயிகள் கறுப்பு முகக் கவசம் அணிந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details