சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது 55 மீனவர்களை விடுவித்து, 8 விசைப் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்தார்.