அரசாணை 62, ஏழாவது ஊதியக்குழுவின் நிலுவை தொகையை வழங்க வேண்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் சேலத்தில் இன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து சேலம் மாவட்ட சிஐடியூ செயலாளர் தியாகராஜன் கூறுகையில், "சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற சுகாதாரத் துறைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
டேங்க் ஆப்பரேட்டர்கள் மேல்நிலை தண்ணீர் தொட்டி திறப்பதற்கு மட்டுமே பணி அமர்த்தப்பட்டவர்கள். ஆனால் அவர்களை மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும், வாரம் முழுவதும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 510 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.