சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தனியார் சுங்கச் சாவடியில் மாநகர காவல் துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பொலீரோ வாகனத்தை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் நிறுத்தி பரிசோதித்ததில், பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான், குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, வாகனத்தில் உள்ள மூட்டைகளை இறக்கி வைத்து சோதனை நடத்தினர். இதில் 32 வெள்ளை சாக்கு மூட்டைகளில் 30 ஹான்ஸ்கள் கொண்ட ஆயிரத்து 600 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சமாகும்.