தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி ஆசிரியரை பீர் பாட்டிலால் குத்த முயன்ற மாணவர் கைது - பள்ளி ஆசிரியரை பீர் பாட்டிலால குத்த முயன்ற மாணவர் கைது

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை பீர் பாட்டிலால் குத்த முயன்ற பிளஸ் 2 மாணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பள்ளி ஆசிரியரை பீர் பாட்டிலால குத்த முயன்ற மாணவர் கைது
பள்ளி ஆசிரியரை பீர் பாட்டிலால குத்த முயன்ற மாணவர் கைது

By

Published : Mar 29, 2022, 3:09 PM IST

சேலம்:ஆத்தூர் அருகேயுள்ள மஞ்சினி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 26ஆம் தேதி பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர், முறையாக முடி வெட்டாமல் பின்புறம் கொண்டை போல் வைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார்.

இதனைக் கண்ட தலைமை ஆசிரியர் அந்த மாணவனை தனது அறைக்கு அழைத்துச் சென்று இது போல் பள்ளிக்கு வரக்கூடாது எனத் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தலைமை ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் நாற்காலி மீதிருந்த பொருள்களை கிழே தள்ளி உடைத்துள்ளார்.

சத்தம் கேட்டு வந்த ஆசிரியர்கள் மாணவனை சமாதானப்படுத்தினார்கள். இது குறித்து தகவலறிந்த பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மாணவனிடம் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வரும்படி கூறியுள்ளனர். அதன்படி மாணவன் தனது பெற்றோரை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

அப்போது மாணவன் தனது பையில் இருந்து காலி பீர் பாட்டிலை எடுத்து உடைத்ததுடன், ‘என்னை மட்டும் தான் குறி வைத்து இப்படி கேட்கிறீர்கள்’ எனக் கூறியபடி தலைமை ஆசிரியரை பாட்டிலால் குத்த முயன்றுள்ளார். உடனடியாக சுதாரித்த சக ஆசிரியர்கள் மாணவனை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த ஆத்தூர் காவல் துறையினர் உடனடியாக அரசுப் பள்ளிக்குச் சென்றனர்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து மாணவன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவன் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தார். பின்னர் மாணவனை அழைத்து அறிவுரை வழங்கி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவனிடம் காவல் துறையினர் விசாரிக்கும் காட்சியும் மாணவன் ஆவேசமாக தலைமை ஆசிரியர் அறை முன்பு இருந்த பொருள்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதோடு நானும் ரவுடி தான் என கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளி ஆசிரியரை பீர் பாட்டிலால குத்த முயன்ற மாணவர் கைது

இதனிடையே பள்ளி தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதன்பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் மாணவன் மீது வழக்குப்பதிவு செய்த ஆத்தூர் நகர காவல் துறையினர், மாணவனை கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:ஈரோடு பள்ளியில் கொடுமை; குழந்தைகளை கழிவறை சுத்தப்படுத்த வைக்கும் ஆசிரியை!

ABOUT THE AUTHOR

...view details