திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் ஒப்பந்ததாரர் மூலம் துப்புரவுப் பணியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த மாதம் ஊதியம் இன்றுவரை தரவில்லை எனவும், இரண்டு ஆண்டுகளாக பொங்கல் போனஸ் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும், இந்த ஆண்டும் அதே ஆயிரம் ரூபாயை பொங்கல் போனஸ் வழங்கப்பட்டதைக் கண்டித்து தங்களுக்கு ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனஸாக வழங்க வேண்டும் என ஒப்பந்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தினர்.