தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் ஒரே நாளில் 185 பேருக்கு கரோனா - கரோனா அப்டேட்

சேலம்: மாவட்டத்தில் 185 பேருக்கு நேற்று (செப்டம்பர் 7) கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Sep 8, 2020, 3:17 AM IST

சேலம் மாநகராட்சியில் 102 பேரும், காடையம்பட்டி 1, கொங்கணாபுரம் 1, மகுடஞ்சாவடி 3, மேச்சேரி 2, மேட்டூர் 5, நங்கவள்ளி 4, ஓமலூர் 7, சங்ககிரி 2, வீரபாண்டி 4, ஆத்தூர் 15, அயோத்தியாப்பட்டணம் 5, பேளூர் 1, கெங்கவல்லி 7, நரசிங்கபுரம் 1, பனமரத்துப்பட்டி 6, பெத்தநாயக்கன்பாளையம் 3, தலைவாசல் 2, வாழப்பாடி 4, ஏற்காடு 5 என மாவட்டத்தில் 180 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 5 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில்,சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்கள் 19 பேரும், பெண்கள் 10 பேரும் என மொத்தம் 29 பேர் சிகிச்சை முடிந்து அவரவர் வீடு திரும்பினர்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 839 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதார துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிக்கப்பட்ட நிலையில்9 ஆயிரத்து 901 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 750 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 188 பேர் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details