சேலம் மாவட்டம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆசிரியர் நகரில் வசிப்பவர் பிரபாகரன். இவரது மனைவி ராதிகா இன்று காலை பேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு பால் மற்றும் காய்கறிகளை வாங்கச் சென்றுள்ளார். அப்பொழுது கடைவீதி செல்லும் சாலையில் ஹெல்மெட் அணிந்திருந்த இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். திடீரென வேகமாக வந்த அவர்கள் ராதிகா முன்பாக நின்றனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்திருந்தவர் ராதிகாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறிக்க, இருவரும் மின்னல் வேகத்தில் பறந்து சென்றனர்.
பட்டப்பகலில் தங்கச் சங்கிலி பறிப்பு - பொதுமக்கள் அச்சம்! - சந்தையில் திருட்டு
சேலம்: ஓமலூரில் இன்று காய்கறி வாங்க சென்ற பெண்ணை வழிமறித்து 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![பட்டப்பகலில் தங்கச் சங்கிலி பறிப்பு - பொதுமக்கள் அச்சம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4791131-thumbnail-3x2-slm.jpg)
salem robbery in market, சேலம் சந்தையில் திருட்டு
salem robbery in market, சேலம் சந்தையில் திருட்டு
இதனால் அதிர்ச்சியடைந்த ராதிகா சத்தம் போட்டுள்ளார். பொதுமக்கள் ஓடிவந்து அவரிடம் விசாரித்து பார்ப்பதற்குள் ஹெல்மெட் வழிப்பறி கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். பின்னர் ராதிகா ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: செல்ஃபோன் கடைகளில் நூதன முறையில் திருடும் இரண்டு இளைஞர்கள் !