தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேட்பாளர் பெயர் இல்லாததால் குழப்பம் - நேற்று வெளியான தேர்தல் முடிவு - Vellakkalpatti Gram Panchayat vote counting

சேலம்: உள்ளாட்சித் தேர்தலின்போது வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

salem
salem

By

Published : Jan 9, 2020, 7:23 AM IST

சேலத்தில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் சாந்தி கண்ணன், விஜயா, ராஜா, ராஜேந்திரன், மாரியப்பன் உள்ளிட்ட ஆறு பேர் போட்டியிட்டனர்.

இதில், இறுதி வாக்காளர் பட்டியலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆறுபேர் பெயர்களில் ராஜா என்பவரின் பெயர் இடம்பெறவில்லை என்பது, வாக்கு எண்ணிக்கை நாளன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வாக்குப் பதிவு முடிவுற்றும் வேட்பாளர் பெயர் இல்லாத காரணத்தால், வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நிறுத்தப்பட்டது.

வாக்குகளை எண்ணும் பணியில் தேர்தல் அலுவலர்கள்

இதனையடுத்து வாக்குச் சீட்டு இருந்த பெட்டி கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி நேற்று ஓமலூர் ஒன்றிய அலுவலகத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

இதில் பதிவான 3 ஆயிரத்து 59 வாக்குகளில் ஆயிரத்து 717 வாக்குகள் பெற்று கத்திரிக்காய் சின்னத்தில் போட்டியிட்ட கண்ணன் என்பவர் ஆயிரத்து 121 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இதையும் படிங்க: குமரியில் மூன்று இடங்களில் மறுவாக்கு எண்ணிக்கை!

ABOUT THE AUTHOR

...view details