தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 10, 2019, 1:24 PM IST

ETV Bharat / state

17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் போக்சோவில் கைது!

சேலம்: 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்ற இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Salem Nursing Student Married Youth Arrested in Pocso ACt
Salem Nursing Student Married Youth Arrested in Pocso ACt

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (28). பன்னிரண்டாம் வகுப்புவரை படித்துள்ள இவர் கூலி தொழில் செய்துவருகிறார். இதனிடையே, கிருபாகரனுக்கும் தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கும் 17 வயது சென்னை மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.

இதனிடையே கடந்த 6ஆம் தேதி மாணவி மாயமானார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தையடுத்து, சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில் குமாரிடம் மாணவியின் பெற்றோர் புகாரளித்தனர். அதனடிப்படையில், காவல் கண்காளிப்பாளர் உத்தரவின் பேரில் சேலம் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் பழனியம்மாள் தலைமையில் மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, கிருபாகரனின் நெருங்கிய நண்பர் சதிஷ்குமார் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், கிருபாகரன் பாண்டிச்சேரியில் இருப்பதாக அவர் தகவல் அளித்தார். அதன்பின் வீடு திரும்பிய சதீஷ்குமார் காவல் நிலையம் சென்றதில் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை குறித்து சதீஷ்குமாரின் பெற்றோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, விரைந்து வந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், சதீஷ்குமாரின் பெற்றோர் சடலத்தை வாங்க மறுத்து சதீஷ்குமாரின் சாவுக்கு காரணமான மகளிர் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் காவல் துறை உயர் அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்திய பின் சடலத்தை வாங்கிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று புதுச்சேரி சென்ற காவல் துறையினர் கிருபாகரனை கைது செய்து மாணவியை மீட்டு சேலம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். அதில், கிருபாகரன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் மது அருந்தி கொடுமை செய்ததால் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதும் தெரியவந்தது.

இளைஞர் போக்சோவில் கைது

அதனைத் தொடர்ந்து, 17 மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்றதாக கிருபாகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அதன்பின், மாணவி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:

ரெக்கார்டு கொண்டுவராததால் ஆசிரியர் கண்டிப்பு - மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details