சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் சூரியகாந்த். இவரின் மனைவி காயத்ரி (25). இவர்களுக்கு யாஷினி என்ற 5 வயது மகளும் முகில் வேந்தன் என்ற 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். சூரியகாந்த் கூலி வேலை செய்து வருகிறார்.
இன்று அவர் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த காயத்ரி தங்களது வீட்டில் உள்ள குளியலறையில் குளிக்க சென்றவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் காயத்ரியின் மாமனார், குளியலறை கதவை தட்டியுள்ளார்.
ஆனால், கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினரை கூப்பிட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது, காயத்ரி குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.