தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக பக்கவாத தின விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி - salem government girls college stroke awareness yoga program

சேலம்: உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு சேலம் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பக்கவாத விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர்.

stroke awareness yoga program

By

Published : Nov 1, 2019, 10:33 AM IST

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29ஆம் தேதி உலக பக்கவாத தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பக்கவாதத்தைத் தடுத்தல், அதற்கான சிகிச்சையளித்தல் தொடர்பாக விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கில் சேலம் அரசு மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு யோகா நிகழ்வு நடைபெற்றது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு யோகா செய்தனர். இதனையடுத்து கல்லூரி மாணவிகளிடம் பக்கவாதத்தின் அறிகுறிகள், பக்கவாதம் வராமல் தடுக்கும் உணவுமுறைகள், உடற்பயிற்சிகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

பக்கவாத விழிப்புணர்வு நிகழ்வு

மேலும், பக்கவாதத்தின் அறிகுறிகள் ஏதேனும் உடம்பில் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல், உடனடியாக நரம்பியல் நிபுணர்களின் ஆலோசனையைப்பெற வேண்டுமென மாணவிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள், நரம்பியல் மருத்துவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:இடைத்தேர்தல் தொகுதி எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு

ABOUT THE AUTHOR

...view details