தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 1, 2020, 7:58 PM IST

ETV Bharat / state

இயற்கை அறுவடையில் அசத்தும் விவசாயி!

சேலம்: இயற்கையான முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த விவசாயி மணி சாதனை படைத்துள்ளார்.

இயற்கை அறுவடையில் அசத்தும் விவசாயி!
இயற்கை அறுவடையில் அசத்தும் விவசாயி!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள அரசிராமணி ஒடசகரை பகுதியைச் சேர்ந்தவர் மணி. விவசாயியான இவர், இயற்கை முறையில் சிவன் சம்பா என்னும் பாரம்பரிய நெல் சாகுபடி செய்துள்ளார்.

இதையடுத்து , இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சார்பில் மாநில அளவில் விவசாயிகளுக்கான நெல் சாகுபடி போட்டிக்கு அவரை வேளாண் துறை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். விவசாயி மணி ஒரு ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையிலும், ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பயிரிடப்பட்ட சிவன் சம்பா என்னும் நெல் சாகுபடியும் செய்து வருகிறார்.

இயற்கை அறுவடையில் அசத்தும் விவசாயி!

இந்தப் பாரம்பரிய நெல் சாகுபடியை கேள்விப்பட்டு நேரில் வந்த வேளாண்மை துறை அதிகாரிகளின் கண் முன்னே, அறுவடை செய்து காண்பித்த விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் மனம் திறந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இதையும் படிங்க...தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து ப. சிதம்பரத்தின் பிரத்யேக பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details