சேலத்தில் கடந்த மாதம் இரவு நேரத்தில் சாலையோரங்களில் படுத்து உறங்கிய மூன்று முதியவர்களின் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டனர். சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபராக, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆண்டிச்சாமி (22) என்பவரை காவல் துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (27) என்பவர் கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், சேலத்தில் மூன்று பேரை தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாகத் தெரிவித்தார்.