தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க உரிய ஆவணம் தேவை -சேலம் ஆட்சியர் - சேலம் மாவட்ட ஆட்சியர்

சேலம்:தேர்தல் நடைமுறை விதிகள் அமலுக்குவந்ததையடுத்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச்செல்ல உரிய ஆவணங்கள் முக்கியம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்துள்ளார்.

Rohini

By

Published : Mar 11, 2019, 3:30 PM IST

2019 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு டெல்லியில் நேற்று(மார்ச்.10) தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தார். மேலும், நேற்று முதல் தேர்தல் விதிகள் அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,"நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனையொட்டி சேலத்தில் தேர்தல் பாதுகாப்பாக நடைபெறுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை 15 லட்சத்து 92 ஆயிரத்து 457 வாக்காளர்கள் உள்ளனர். இதில் எட்டு லட்சத்து 320 ஆண்களும், ஏழு லட்சத்து 92 ஆயிரத்து 90 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 77 பேரும் அடங்குவர்.

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில், நகர்ப்பகுதியில் 161 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை, அதேபோல் புறநகர்ப் பகுதியில் 81 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன.

தேர்தல் அமைதியாக நடைபெற பதற்றமான பகுதிகளில் துணை ராணுவமும் பயன்படுத்தப்படும். பொது இடங்களில் அரசியல் கட்சி தொடர்பான பேனர்கள், அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்ற பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது .

மேலும், பொது இடங்களில் அரசியல் தலைவர்களின் விளம்பரங்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது . அதேபோன்று தேர்தல் தொடர்பான சுவர் விளம்பரங்கள் அனைத்தும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அழிக்கப்பட்டுவருகிறது.

தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே எந்தவித அரசின் சார்பில் வழங்கப்படும் ஊதியத்திற்கு அறிவிப்புகளும், சலுகைகளும் வழங்கக் கூடாது.

இது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு உள்ளிட்டவைகள் வழங்கப்படுவதைத் தடுக்க பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அவ்வாறு வழங்கப்படுவது கண்டறியப்பட்டால் உடனடியாக கடுமையான நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும். வாக்கு சேகரிப்பது தொடர்பான சமூக வலைதளங்களை வல்லுநர்கள் குழு கொண்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள்படி ரூ.50,000 வரை பணம் எடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் எடுத்துச்செல்ல உரிய ஆவணங்கள் முக்கியம்" என்று தெரிவித்தார்.

அதையடுத்து, அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details