சேலம் :சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களில் ஏற்காடு மலைப்பகுதியில் மட்டும் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக, மலைப்பாதையில் ஆங்காங்கே அருவிகள் உருவாகி தண்ணீர் விழுந்து சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் ஏற்காடு அடிவாரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் மலைப்பாதையில் பாறை ஒன்று உருண்டு விழுந்தது.